அன்றும் இன்றும்
தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் சிறு விவசாயமும் சிறு விவசாயியும் அழியும் தருவாயில் இருப்பதைக் கண்டு மனம் வெம்பிய ஒரு சிறு விவசாயி மகனின் புலம்பல். பாரதி அன்று தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என் கருத்து: தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் காடு மேடுகளை அழித்து சமன் செய்து விவசாயம் செய்து மனித குலத்திற்கு உணவிடுவோம். அரசியல் இன்று தனி ஒரு மந்திரிக்குப் பல கோடி இல்லையெனில் அடைந்திடுவானே பொறம்போக்கு நிலம் தனி ஒரு சட்ட மன்ற உறுப்பினர்க்குப் பேராசையெனில் அபகரித்திடுவானே ஏழை விவசாயி நிலம் பேராசைப் பேய்களிடமிருந்து விளை நிலங்களைக் காக்க வில்லையெனில் சிதைந்திடுமே உணவின்றி மனித குலம் --------------- அவ்வையார் அன்று: நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான் அவலம் இன்று: வரப்பை உயற்ற விவசாயி இல்லை நீரை உயற்ற மழையும் இல்லை குடியை காக்கும் கோனும் இல்லை இவை அனைத்தும் இருப்பினும் விவசாயம் செய்ய நிலம் இல்லாக் காலம் தொலைவில் இல்லை ----...